பிள்ளைப் பிராயத்திலே
⁵i
பிள்ளைப் பிராயத்திலே
Let us begin with the ever famous raagamaalika CLASSIC by N.C.VASANTHAKOKILAM,
,the poem on Goddess Saraswathy.
Who set the glorious music for this poem?
Was it done by NCV herself?
-
N.C.VASANTHAKOKILAM
பிள்ளைப் பிராயத்திலே-அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே-மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல்-அவள்
வீணையும் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதம்-கண்டேன்
வெள்ளை மனம் பறிகொடுத் தேன், அம்மா!..
NEELAAMBARI RAAGAM
----------------------------
ஆடி வருகையிலே அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்ப்பாள் !
கையில் ஏடு தரித்திருப்பாள் ,
அதில் இங்கிதமாக பதம் படிப்பாள் !
நாடி அருகனைந்தால் பல்
ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள் !
கூடி மகிழவோம் என்றால் விழிக்கோணத்திலே
நகை காட்டி செ லவாள் !
( பீம்ப்ளாஸ் )
------
ஆற்றங்கரைதனிலே
தனியானதோர் மண்டப மீதினிலே
காற்றை நுகர்ந்திருந்தேன் ,
கன்னி கவிதை கொணர்ந்து தந்தாள் !
ஏற்று மனம் மகிழ்ந்தே
" அடி! என்னோடிணங்கி மண்ம் புரிவாய் என்று
கேட்டிட்ட போதினிலே
இளம் புன்னகை பூத்து மறைந்து விட்டாள் !
(கமாஜ் )
------------
.
Next
.வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள்
.madurai maNi iyer
https://bharathy-songs.blogspot.com/p/blog-page_1.html
back to index