நெஞ்சு பொறுக்குதில்லையே

 23

நெஞ்சு பொறுக்குதில்லையே.







C.S.JAYARAMAN

music by AVM Sudharsanam

Sindhubairavi




https://youtu.be/YwL4egpxW8s?si=IkxDaXvkz4Y2MtLQ


நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்


அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே

வஞ்சனைப் பேய்களென்பார்-இந்த

மரத்திலென்பார்; அந்த குளத்திலென்பார்

துஞ்சுது முகட்டி லென்பார்-மிக

துயர்படு வார்எண்ணி பயப்படுவார் (நெஞ்சு)

.

கஞ்சி குடிப்பதற்கிலார் -அதன்

காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்

பஞ்சமோ பஞ்சமென்றே -நிதம்

பரிதவித் தே உயிர் துடிதுடித்து

துஞ்சி மடிகின்றாரே -இவர்

துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே (நெஞ்சு)

.

Popular posts from this blog

INDEX-1 TO 10 of 70

Kuyil paattu by suryaprakash

Sanjay