கண்ணன் பிறந்தான்

 கண்ணன் பிறந்தான்










SANGEETHA KALAANIDHI

BOMBAY SISTERS

 ( SAROJA -LALITHA)..



https://youtu.be/sUhHLnhbZXY?si=WUavhLzHjsLDR-Jl

.

கண்ணன் பிறந்தான் -- எங்கள்

கண்ணன் பிறந்தான் -- இந்தக்

காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்.

திண்ண முடையான் -- மணி

வண்ண முடையான் உயர்

தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்.

1


பண்ணை யிசைப்பீர் -- நெஞ்சிற்

புண்ணை யொழிப்பீர் -- இந்தப்

பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை

எண்ணிடைக் கொள்வீர் -- நன்கு

கண்ணை விழிப்பீர் -- இனி

ஏதுங்குறைவில்லை: வேதம் துணையுண்டு.


2


அக்கினி வந்தான் -- அவன்

திக்கை வளைத்தான் -- புவி

யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்;

துக்கங் கெடுத்தான்சுரர்

ஒக்கலும் வந்தார் -- சுடர்ச்

சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள

3


மிக்க திரளாய் -- சுரர்

இக்கணந் தன்னில்-இங்கு

மேவி நிறைந்தனர்; பாவி யசுரர்கள்

பொக்கென வீழ்ந்தார், -- உயிர்

கக்கி முடிந்தார் ; -- கடல்

போல ஒலிக்குது வேதம் புவிமிசை.

4


சங்கரன் வந்தான்; -- இங்கு

மங்கல மென்றான்; -- நல்ல

சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்;

பங்க மொன் றில்லை -- ஒளி

மங்குவதில்லை; இந்தப்

பாரின்கண் முன்பு வானத்திலே நின்று

(கண்ணன் பிறந்தான்)

5


கங்கையும் வந்தாள்; -- கலை

மங்கையும் வந்தாள்; -- இன்பக்

காளி பராசக்தி அன்புட னெய்தினள்;

செங்கம லத்தாள்-எழில்

பொங்கு முகத்தாள் -- திருத்

தேவியும் வந்து சிறப்புற நின்றனள்.


===

back to index

index

Popular posts from this blog

INDEX-1 TO 10 of 70

Kuyil paattu by suryaprakash

Sanjay