கண்ணன் பிறந்தான்
கண்ணன் பிறந்தான்
SANGEETHA KALAANIDHI
BOMBAY SISTERS
( SAROJA -LALITHA)..
https://youtu.be/sUhHLnhbZXY?si=WUavhLzHjsLDR-Jl
.
கண்ணன் பிறந்தான் -- எங்கள்
கண்ணன் பிறந்தான் -- இந்தக்
காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்.
திண்ண முடையான் -- மணி
வண்ண முடையான் உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்.
1
பண்ணை யிசைப்பீர் -- நெஞ்சிற்
புண்ணை யொழிப்பீர் -- இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை
எண்ணிடைக் கொள்வீர் -- நன்கு
கண்ணை விழிப்பீர் -- இனி
ஏதுங்குறைவில்லை: வேதம் துணையுண்டு.
2
அக்கினி வந்தான் -- அவன்
திக்கை வளைத்தான் -- புவி
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்;
துக்கங் கெடுத்தான்சுரர்
ஒக்கலும் வந்தார் -- சுடர்ச்
சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள
3
மிக்க திரளாய் -- சுரர்
இக்கணந் தன்னில்-இங்கு
மேவி நிறைந்தனர்; பாவி யசுரர்கள்
பொக்கென வீழ்ந்தார், -- உயிர்
கக்கி முடிந்தார் ; -- கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை.
4
சங்கரன் வந்தான்; -- இங்கு
மங்கல மென்றான்; -- நல்ல
சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்;
பங்க மொன் றில்லை -- ஒளி
மங்குவதில்லை; இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று
(கண்ணன் பிறந்தான்)
5
கங்கையும் வந்தாள்; -- கலை
மங்கையும் வந்தாள்; -- இன்பக்
காளி பராசக்தி அன்புட னெய்தினள்;
செங்கம லத்தாள்-எழில்
பொங்கு முகத்தாள் -- திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள்.
===
back to index