முருகா - முருகா - முருகா,வருவாய் மயில் மீதினிலே

 65

முருகா - முருகா - முருகா,வருவாய் மயில் மீதினிலே

.நாட்டைக் குறிஞ்சி










சீர்காழி கோவிந்தராஜன்

KV.மகாதேவன்/ஆத்மநாதன் இசையில்.


NAALU VELI NILAM (1959)


https://youtu.be/6ZpP18pvab8?si=yGFypfI6ZB3fM0P4:


முருகா -- முருகா -- முருகா

வருவாய் மயில் மீதினிலே

வடிவேலுடனே வருவாய்

தருவாய் நலமும் தகவும் புகழும்

தவமும் திறமும் தனமும் கனமும். (முருகா) 1.


அடியார் பலரிங்குளரே

அவரை விடுவித் தருள்வாய்

முடியா மறையின் முடிவே!

அசுரர் முடிவே கருதும்

வடிவேலவனே!


சுருதிப் பொருளே, வருக.

துணிவே, கனலே, வருக.

கருதிக் கருதிக் கவலைப் படுவார்

கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா) 3.


அமரா

வதிவாழ்வுறவே

அருள்வாய்! சரணம், சரணம்!

குமரா,

பிணி யாவையுமே சிதறக்

குமுறும் சுடர்வேலவனே, சரணம். (முருகா) 4

.

அறிவாகிய கோயிலிலே

அருளாகிய தாய் மடிமேல்

பொறிவேலுடனே, வளர்வாய்,

அடியார்

புதுவாழ்வுறவே புவிமீதருள்வாய். (முருகா) 5.


குருவே, பரமன் மகனே,

குகையில் வளருங் கனலே,

தருவாய் தொழிலும் பயனும்,

அமரர்

சமரா திபனே, சரணம், சரணம்..?.

.

What lovely lines!

Faithfully rendered, though a film song..



SOWMYA


https://youtu.be/2iPiX7DTx8A?si=_2CTcLxHXlpllwv5



index

index

Popular posts from this blog

INDEX-1 TO 10 of 70

Kuyil paattu by suryaprakash

Sanjay