தீராத விளையாட்டுப் பிள்ளை
5
தீராத விளையாட்டுப் பிள்ளை
"Vedhala Ulagam -
Theeratha Vilayattu Pillai Song"
1948
D.K.PATTAMMAL
dance by kumari Kamala
https://youtu.be/YyjoNQgQTAE?si=pkPFGC1V0iFAwveg
தீராத விளையாட்டுப் பிள்ளை ,
கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை
தின்னப் பழம் கொண்டு தருவான் ,
பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்னைய்யன் என்றால்
அதை எச்சில் படுத்திக் கடித்துக் கொடுப்பான்
(SINDHUBAIRAVI)
...
அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை
அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்.
(KAMAJ) (தீராத)
பின்னலைப் பின்னின் றிழப்பான்;-தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்.
(SHANMUGAPRIYA)
(தீராத
புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,
கள்ளர்ல் மயங்குவது போலே அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.
(MAAND)
====
back to index