மலரின் மேவு திருவே

 மலரின் மேவு திருவே!-உன் மேல் மைல் பொங்கி நின்றேன்.










SANGEETHA KALAANIDHI

BOMBAY SISTERS ( SAROJA -LALITHA)


https://youtu.be/sD2rakRKDIQ?si=JR2zz7Z-VMPTXTGN


மலரின் மேவு திருவே!-உன் மேல் 

யைல் பொங்கி நின்றேன்;

நிலவு செய்யும் முகமும்-காண்பார்

நினைவ ழிக்கும் விழியும்,

கலக லென்ற மொழியும்-தெய்வக்

களிது லங்கு நகையும்,

இலகு செல்வ வடிவும்-கண்டுன்

இன்பம் வேண்டு கின்றேன்.


கமல மேவு திருவே!-நின்மேல்

காதலாகி நின்றேன்.

குமரி நின்னை இங்கே-பெற்றோர்

கோடி யின்ப முற்றார்;

அமரர் போல வாழ்வேன்,-என்மேல்

அன்பு கொள்வை யாயின்

இமமய வெற்பின் மோத,-நின்மேல்

இசைகள் பாடி வாழ்வேன்.

.பொன்னும் நல்ல மணியும்-சுடர்செய்

பூண்க ளேந்தி வந்தாய்!

மின்னு நின்தன் வடிவிற்-பணிகள்

மேவி நிற்கும் அழகை

என்னு ரைப்ப னேடீ!-திருவே!.

.

செல்வ மெட்டு மெய்தி-நின்னாற்

செம்மை யேறி வாழ்வேன்;

இல்லை என்ற கொடுமை-உலகில்

இல்லை யாக வைப்பேன்;

முல்லை போன்ற முறுவல்-காட்டி

மோக வாதை நீக்கி,

எல்லை யற்ற சுவையே!-எனை நீ

என்றும் வாழ வைப்பாய்.

===

back to index

index

Popular posts from this blog

INDEX-1 TO 10 of 70

Kuyil paattu by suryaprakash

Sanjay