ஓடி விளையாடு பாப்பா

 52

ஓடி விளையாடு பாப்பா

"Odi Vilaiyadu Paappa

.










Sirkazhi S. Govindarajan

music- G.RAMANATHAN


Kappalottiya Thamizhan-FILM

---


=================================

A wonderful poem.

not all the stanzas are sung though

==============

ஓடி விளையாடு பாப்பா, – நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா, – ஒரு

குழந்தையை வையாதே பாப்பா

-

சின்னஞ் சிறுகுருவி போலே – நீ

திரிந்து பறந்துவா பாப்பா,

வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ

மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

-

கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்

கூட்டி விளையாடு பாப்பா,

எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு

இரக்கப் படவேணும் பாப்பா.


பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா;

வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது

மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

-

வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு

வயலில் உழுதுவரும் மாடு,

அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை

ஆதரிக்க வேணுமடி பாப்பா.

-

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு – என்று

வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

--


பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்

புறஞ்சொல்ல லாகாது பாப்பா,

தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு

தீங்குவர மாட்டாது பாப்பா.

-

பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா,

மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

-

துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா,

அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

-

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, – தாய்

சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,

தேம்பி யழுங்குழந்தை நொண்டி, – நீ

திடங்கொண்டு போராடு பாப்பா.

-

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்

தாயென்று கும்பிடடி பாப்பா,

அமிழ்தில் இனியதடி பாப்பா, – நம்

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.


சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்

தொழுது படித்திடடி பாப்பா;

செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் – அதைத்

தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

-

வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்

வாழும் குமரிமுனை பாப்பா,

கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன்

கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

-

வேத முடையதிந்த நாடு, – நல்ல

வீரர் பிறந்த திந்த நாடு,

சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்

தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

-

சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்.

-

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்;

வயிர முடைய நெஞ்சு வேணும்; – இது

வாழும் முறைமையடி பாப்பா.

======

Popular posts from this blog

INDEX-1 TO 10 of 70

Kuyil paattu by suryaprakash

Sanjay