ஜயமுண்டு பயமில்லை மனமே

 ஜயமுண்டு பயமில்லை மனமே

.



SANGEETHA KALAANIDHI

BOMBAY SISTERS ( SAROJA -LALITHA)


https://youtu.be/yVst6_rulw8?si=0bX_-lvY17GoICE7





ஜயமுண்டு பயமில்லை மனமே!-இந்த

ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு. (ஜய)


பயனுண்டு பக்தியினாலே-நெஞ்சிற்

பதிவுற்றற குலசக்தி சரணுண்டு பகையில்லை (ஜய)


புயமுண்டு குன்றத்தைப் போலே-சக்தி

பொற்பாத முண்டு அதன் மேலே;

நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;

நெறியுண்டு,குறியுண்டு,குலசக்தி வெறியுண்டு (ஜய)


மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும்-தெய்வ

வலியுண்டு-- தீமையைப் போக்கும்;

விதியுண்டு,தொழிலுக்கு விளைவுண்டு,குறைவில்லை;

விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு (ஜய)


அலைபட்ட கடலுக்கு மேலே-சக்தி

அருளென்னுந் தோணியி னாலே

தொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்

துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய


back to index

index

Popular posts from this blog

INDEX-1 TO 10 of 70

Kuyil paattu by suryaprakash

Sanjay