தூண்டிற் புழுவினைப்போல்
4
தூண்டிற் புழுவினைப்போல்
D.K.PATTAMMAL
https://drive.google.com/file/d/1yLvkP6aLmW8HRqlqOgHDH-YLZKDQ2-KN/view?usp=drivesdk
தூண்டிற் புழுவினைப்போல் -
வெளியே சுடர்விளக்கினைப் போல் ,
நீண்ட பொழுதாக-- எனது நெஞ்சந்துடித்ததடீ!
கூண்டுக்கிளியினைப்போல் --தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன் ;
வேண்டும் பொருளையெல்லாம்--
மனது வெறுத்து விட்டதடீ!
பாயின்மிசை நானும் --தனியே படுத்திருக்கையிலே, தாயினைக்கண்டாலும்,--சகியே! சலிப்பு வந்த
தடீ!
வாயினில் வந்ததெல்லாம் ,--சகியே! வளர்த்து
ப் பேசிடுவீர்; நோயினைப்போலஞ்சினேன் ;--சகியே!.
நுங்களுறவையெல்லாம் . உணவு செல்லவில்லை ;--சகி
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை;--சகியே! மலர் பிடிக்கவில்லை;
குணமுறுதி யில்லை ;--எதிலும் குழப்பம் வந்ததடீ !
கணமும் உள்ளத்திலே --சுகமே காணக் கிடைத்ததில்லை.
பாலுங் கசந்ததடீ!--சகியே! படுக்கை நொந்ததடீ!
கோலக்கிளி மொழியும் --செவியில் குத்தலெடுத்ததடீ !
நாலு வயித்தியரும் --இனிமேல் நம்புதற்கில்லைஎன்றார்;
பாலத்துச் சோசியனும் --கிரகம் படுத்துமென்றுவிட்டான்
கனவு கண்டதிலே-- ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்கவில்லை --எவனோ என்னகந் தொட்டுவிட்டான் .
வினவக் கண் விழித்தேன் ;--
சகியே! மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே --புதிதோர் மகிழ்ச்சி கண்ட தடீ !
உச்சி குளிர்ந்ததடீ;--சகியே! உடம்பு நேராச்சு ;
மச்சிலும் வீடுமெல்லாம் --முன்னைப்போல்
மனத்துக் கொத்ததடீ! இச்சை பிறந்ததடீ!--
எதிலும் இன்பம் விளைந்ததடீ!
அச்சமொழிந்ததடீ!--சகியே!
அழகு வந்ததடீ ! எண்ணும் பொழுதிலெல்லாம் -
-அவன்கை இட்ட விடத்தினிலே தண்ணென்றிருந்ததடீ !-
-புதிதோர் சாந்தி பிறந்ததடீ!
எண்ணி எண்ணிப் பார்த்தேன் ;-
-அவன்தான் யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் --
அங்கனே கண்ணின் முன் நின்றதடீ
===
back to index