தூண்டிற் புழுவினைப்போல்

4

தூண்டிற் புழுவினைப்போல்












D.K.PATTAMMAL


https://drive.google.com/file/d/1yLvkP6aLmW8HRqlqOgHDH-YLZKDQ2-KN/view?usp=drivesdk


தூண்டிற் புழுவினைப்போல் -

வெளியே சுடர்விளக்கினைப் போல் ,

நீண்ட பொழுதாக-- எனது நெஞ்சந்துடித்ததடீ!


கூண்டுக்கிளியினைப்போல் --தனிமை

கொண்டு மிகவும் நொந்தேன் ;

வேண்டும் பொருளையெல்லாம்--

மனது வெறுத்து விட்டதடீ!


பாயின்மிசை நானும் --தனியே படுத்திருக்கையிலே, தாயினைக்கண்டாலும்,--சகியே! சலிப்பு வந்த

தடீ!


வாயினில் வந்ததெல்லாம் ,--சகியே! வளர்த்து

ப் பேசிடுவீர்; நோயினைப்போலஞ்சினேன் ;--சகியே!.

நுங்களுறவையெல்லாம் . உணவு செல்லவில்லை ;--சகி


உறக்கங் கொள்ளவில்லை.



மணம் விரும்பவில்லை;--சகியே! மலர் பிடிக்கவில்லை;

குணமுறுதி யில்லை ;--எதிலும் குழப்பம் வந்ததடீ !

கணமும் உள்ளத்திலே --சுகமே காணக் கிடைத்ததில்லை.

பாலுங் கசந்ததடீ!--சகியே! படுக்கை நொந்ததடீ!


கோலக்கிளி மொழியும் --செவியில் குத்தலெடுத்ததடீ !

நாலு வயித்தியரும் --இனிமேல் நம்புதற்கில்லைஎன்றார்;

பாலத்துச் சோசியனும் --கிரகம் படுத்துமென்றுவிட்டான்

கனவு கண்டதிலே-- ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல்,


இனம் விளங்கவில்லை --எவனோ என்னகந் தொட்டுவிட்டான் .

வினவக் கண் விழித்தேன் ;--

சகியே! மேனி மறைந்து விட்டான்;

மனதில் மட்டிலுமே --புதிதோர் மகிழ்ச்சி கண்ட தடீ !


உச்சி குளிர்ந்ததடீ;--சகியே! உடம்பு நேராச்சு ;

மச்சிலும் வீடுமெல்லாம் --முன்னைப்போல்

மனத்துக் கொத்ததடீ! இச்சை பிறந்ததடீ!--

எதிலும் இன்பம் விளைந்ததடீ!

அச்சமொழிந்ததடீ!--சகியே!

அழகு வந்ததடீ ! எண்ணும் பொழுதிலெல்லாம் -

-அவன்கை இட்ட விடத்தினிலே தண்ணென்றிருந்ததடீ !-

-புதிதோர் சாந்தி பிறந்ததடீ!


எண்ணி எண்ணிப் பார்த்தேன் ;-

-அவன்தான் யாரெனச் சிந்தை செய்தேன்;

கண்ணன் திருவுருவம் --

அங்கனே கண்ணின் முன் நின்றதடீ

===

back to index

index

Popular posts from this blog

INDEX-1 TO 10 of 70

Kuyil paattu by suryaprakash

Sanjay