தாயின் மணிக்கொடி பாரீர்!

 40

தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்

D.K.PATTAMMAL

VINTAGE 78 RPM RECORD















https://www.youtube.com/watch?v=FGLLYfqjbX8


தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

--

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன்

உச்சியின் மேல்‘வந்தே மாதரம்’என்றே

பாங்கின் எழுதித் திகழும்-செய்ய

பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!

---

செந்தமிழ் நாட்டுப் பொருநர்,-கொடுந்

தீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர்,

சிந்தை துணிந்த தெலுங்கர்,-தாயின்

சேவடிக் கேபணி செய்திடு துளுவர்.


கன்னடர் ஒட்டிய ரோடு-போரில்

காலனும் அஞ்சக் கலக்கு மராட்டர்,

பொன்னகர்த் தேவர்க ளொப்ப-நிற்கும்

பொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர்.


பூதலம் முற்றிடும் வரையும்-அறப்

போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,

மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில்

மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்


பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப்

பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,

துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத்

தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும்.


சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர்

சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!

தேர்ந்தவர் போற்றும் பரத-நிலத்

தேவி துவஜம் சிறப்புற வாழ்க!

********************************

Popular posts from this blog

INDEX-1 TO 10 of 70

Kuyil paattu by suryaprakash

Sanjay