நல்லதோர் வீணை செய்தே
10
நல்லதோர் வீணை செய்தே.
ILAYARAJA
https://youtu.be/9guE2xSdgdE?si=Uhn4RcopY6oeD5s9
நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி – எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ, – இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி – நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் – உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையறு மனங்கேட்டேன் – நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும் – சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன் – இவை அருள்வதில் உனக்கெதுந்