பகைவனுக் கருள்வாய்

 56

பகைவனுக் கருள்வாய்-














MM DANDAPANI DESIKAR

Kaanada raagam


https://youtu.be/ft-Uygr8_kk?si=wTyt0byvP45AmxpG

பகைவனுக் கருள்வாய்! 

நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்! 

புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே! பூமியிற் கண்டோமே.

 பகைநடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே! பரமன் வாழ்கின்றான். (பகைவ).

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்

செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே!

குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்

கொடி வளராதோ?-நன்னெஞ்சே! (பகைவ)


௩)

உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்

உள்ளம் நிறைவாமோ,-நன்னெஞ்சே!

தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்

சேர்த்தபின் தேனோமோ?நன்னெஞ்சே! (பகைவ)


௪)

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது

வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!

தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற

சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே! (பகைவ)


௫)

போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்

போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!

நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு

நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே! (பகைவ)


௬)

தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு

சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!

அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்

அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே! (பகைவ)

.

.

Popular posts from this blog

INDEX-1 TO 10 of 70

Kuyil paattu by suryaprakash

Sanjay