கூலிமிகக் கேட்பார்
34
கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்
G.RAMANATHAN
( music director sings the song in his sonorous voice).
Film Nalla thangai
1955
.
https://youtu.be/LrsVpMj_aKA?si=rrsj0N6KtwLhDpKQ.
கூலிமிகக் கேட்பார்
கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
வேலைமிக வைத்திருந்தால்
வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; ...5
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்;
ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதி யோடு
தனியிடத்தே பேசிடுவார்
உள்வீட்டுச் செய்தியெல்லாம்
ஊரம் பலத்துரைப்பார்;
என்வீட்டில் இல்லையென்றால்
எங்கும் முரசறைவார்; ... 10
சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;
எங்கிருந்தோ வந்தான், '
இடைச்சாதி நான்' என்றான்;
மாடுகன்று மேய்த்திடுவேன்,
மக்களை நான் காத்திடுவேன்