தொன்று நிகழ்ந்த தனைத்தும்
29
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
D.K.PATTAMMAL
.
MAANJI./BAIRAVI..
https://www.youtube.com/watch?v=zpSsxYj9dwo
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும்-இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம்எங்கள் தாய்..
யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயெங்கள் தாய்-இந்தப்
பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்
பயின்றிடு வாள் எங்கள் தாய். 2
முப்பது கோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற வொன்றுடை யாள்-இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள், எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்.
.
கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
கைதொழு வாள்எங்கள் தாய்-கையில்
ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும்
ஒருவனை யுந்தொழு வாள்..
.
வெண்மை வளர் இமாச்சலம் தந்த
விரான் மகளாம் எங்கள் தாய்.
அவள் திண்மை மறையினும் தான் மறையாள்
நித்தம் சீர் உருவாள் எங்கள் தாய் !
எங்கள் தாய் !
எங்கள் தாய் !
.