தொன்று நிகழ்ந்த தனைத்தும்

 29

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு

D.K.PATTAMMAL



.











MAANJI./BAIRAVI..


https://www.youtube.com/watch?v=zpSsxYj9dwo


தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு

சூழ்கலை வாணர்களும்-இவள்

என்று பிறந்தவள் என்றுண ராத

இயல்பின ளாம்எங்கள் தாய்..


யாரும் வகுத்தற் கரிய பிராயத்த

ளாயினு மேயெங்கள் தாய்-இந்தப்

பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்

பயின்றிடு வாள் எங்கள் தாய். 2


முப்பது கோடி முகமுடை யாள்உயிர்

மொய்ம்புற வொன்றுடை யாள்-இவள்

செப்பு மொழிபதி னெட்டுடை யாள், எனிற்

சிந்தனை ஒன்றுடையாள்.

.

கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்

கைதொழு வாள்எங்கள் தாய்-கையில்

ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும்

ஒருவனை யுந்தொழு வாள்..

.

வெண்மை வளர் இமாச்சலம் தந்த

விரான் மகளாம் எங்கள் தாய்.

அவள் திண்மை மறையினும் தான் மறையாள்

நித்தம் சீர் உருவாள் எங்கள் தாய் !


எங்கள் தாய் !

எங்கள் தாய் !

.

Popular posts from this blog

INDEX-1 TO 10 of 70

Kuyil paattu by suryaprakash

Sanjay