காணி நிலம் வேண்டும்..CSJ and Mlv

3

காணி நிலம் வேண்டும்


..








C.S.JAYARAMAN and M.L.VASANTHAKUMARI


https://youtu.be/E_X7I18BeK0?si=v3G100SrgPoEkc5V


காணி நிலம் வேண்டும் – பராசக்தி காணி நிலம் வேண்டும்,

– அங்கு தூணில் அழகியதாய் –

நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் –

அந்தக் காணி நிலத்தினிடையே –

ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும் –

அங்கு கேணியருகினிலே –

தென்னைமரம் கீற்று மிளநீரும்*.

பக்கத்திலே வேணும் –

நல்ல முத்துச் சுடர்போலே

– நிலாவொளி முன்பு வரவேணும்,

அங்கு கத்துங் குயிலோசை –

சற்றே வந்து காதிற் படவேணும், –

என்றன் சித்தம் மகிழ்ந்திடவே –

நன்றாயிளந் தென்றல் வரவேணும்...


பாட்டுக் கலந்திடவே –

அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும் –

எங்கள் கூட்டுக் களியினிலே –

கவிதைகள் கொண்டுதர வேணும் –

அந்தக் காட்டு வெளியினிலே –

அம்மா! நின்றன் காவலுற வேணும், –

என்றன் பாட்டுத் திறத்தாலே –

இவ்வையத்தைப் பாலித்திட வேணும்.

.

Next

தூண்டிற் புழுவினைப்போல்

https://bharathy-songs.blogspot.com/p/blog-page_47.html


back to index page

index

Popular posts from this blog

INDEX-1 TO 10 of 70

Kuyil paattu by suryaprakash

Sanjay