காணி நிலம் வேண்டும்..CSJ and Mlv
3
காணி நிலம் வேண்டும்
..
C.S.JAYARAMAN and M.L.VASANTHAKUMARI
https://youtu.be/E_X7I18BeK0?si=v3G100SrgPoEkc5V
காணி நிலம் வேண்டும் – பராசக்தி காணி நிலம் வேண்டும்,
– அங்கு தூணில் அழகியதாய் –
நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் –
அந்தக் காணி நிலத்தினிடையே –
ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும் –
அங்கு கேணியருகினிலே –
தென்னைமரம் கீற்று மிளநீரும்*.
பக்கத்திலே வேணும் –
நல்ல முத்துச் சுடர்போலே
– நிலாவொளி முன்பு வரவேணும்,
அங்கு கத்துங் குயிலோசை –
சற்றே வந்து காதிற் படவேணும், –
என்றன் சித்தம் மகிழ்ந்திடவே –
நன்றாயிளந் தென்றல் வரவேணும்...
பாட்டுக் கலந்திடவே –
அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும் –
எங்கள் கூட்டுக் களியினிலே –
கவிதைகள் கொண்டுதர வேணும் –
அந்தக் காட்டு வெளியினிலே –
அம்மா! நின்றன் காவலுற வேணும், –
என்றன் பாட்டுத் திறத்தாலே –
இவ்வையத்தைப் பாலித்திட வேணும்.
.
Next
தூண்டிற் புழுவினைப்போல்
https://bharathy-songs.blogspot.com/p/blog-page_47.html
back to index page