எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி. D.K.PATTAMMAL

30

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி.







D.K.PATTAMMAL

Vintage 78 RPM record

1945

.

https://www.youtube.com/watch?v=bXMaYZ6HioE .

.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே -அதன்


முந்தைய ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே -அவர்


சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே -இதை


வந்தனை கூறி மனதில் இருத்தி ,என்

வாயுற வாழ்த்தேனோ -இதை


வந்தே மாதரம், வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?

.இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள்

ஈந்ததும் இந்நாடே -எங்கள்


அன்னையர் தோன்றி மழலைகள் கூறி

அறிந்ததும் இந்நாடே -அவர்


கன்னியராகி நிலவினிலாடிக்

களித்ததும் இந்நாடே -தங்கள்


பொன்னுடலின்புற நீர்விளையாடி இல்

போந்ததும் இந்நாடே -இதை


வந்தே மாதரம், வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?


மங்கையராயவர் இல்லறம் நன்கு

வளர்த்ததும் இந்நாடே -அவர்


தங்க மதலைகள் ஈன்று அமுதூட்டித்

தழுவியதும் இந்நாடே -மக்கள்


துங்கமுயர்ந்து வளர்கெனக் கோயில்கள்

சூழ்ந்ததும் இந்நாடே -பின்னர்


அங்கவர் மாய அவருடற் பூந்துகள்

ஆர்ந்ததும் இந்நாடே -இதை


வந்தே மாதரம்,வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?"

Popular posts from this blog

INDEX-1 TO 10 of 70

Kuyil paattu by suryaprakash

Sanjay